கிரிக்கெட்

மன்னிப்பு கேட்டார், அனுராக் தாகூர்

அனுராக் தாகூர் தனது செயலுக்கு விளக்கம் அளித்ததுடன் மன்னிப்பும் கேட்டு இருந்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த போது லோதா கமிட்டி விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியதை மறைத்து தவறான தகவலை தெரிவித்ததால் அனுராக் தாகூர் அந்த பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதுடன், அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதையடுத்து அனுராக் தாகூர் தனது செயலுக்கு விளக்கம் அளித்ததுடன் மன்னிப்பும் கேட்டு இருந்தார். இதனை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட்டு அவரை புதிதாக தெளிவான முறையில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும் படி அறிவுறுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து அனுராத் தாகூர் சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,நீதிமன்றத்தின் மாண்பை குலைக்கும் நோக்கம் எனக்கு ஒருபோதும் கிடையாது என்றும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு