கிரிக்கெட்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: அரையிறுதியில் இந்திய ‘ஏ’ அணி

இந்திய ‘ஏ’ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தோகா,

வளர்ந்து வரும் வீரர்களுக்கான (ரைசிங் ஸ்டார்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது. இதில் பி பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த கடைசி லீக்கில் இந்திய ஏ அணி, ஓமனுடன் மோதியது. முதலில் பேட் செய்த ஓமன் 7 விக்கெட்டுக்கு 135 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆடிய இந்திய ஏ அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 138 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டநாயகனாக ஜொலித்த ஹர்ஷ் துபே 53 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். வைபவ் சூர்யவன்ஷி 12 ரன்னில் கேட்ச் ஆனார். 3-வது லீக்கில் ஆடிய இந்திய ஏ அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த பிரிவில் ஏற்கனவே பாகிஸ்தான் (3 வெற்றியுடன் 6 புள்ளி) அரையிறுதியை எட்டிவிட்டது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்