கிரிக்கெட்

ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஹராரே,

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 84 பந்துகளில் 112 ரன்கள் குவித்தார். இதில் 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும்.

மேலும் கூப்பர் கானொலி 78 ரன்களும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 53 ரன்களும் விளாசினர். கடைசி கட்டத்தில் ஆலிவர் பீக் வெறும் 18 பந்துகளில் 41 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினார்.

357 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை.

அந்த அணி 48.3 ஓவர்களில் 272 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் சிக்கந்தர் ராசா அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் கூப்பர் கானொலி, மாட் ரென்ஷா, ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ஆடம் ஜாம்பா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன் மூலம் ஆஸ்திரேலியா 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

SCROLL FOR NEXT