கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கபட்டுள்ளது. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய நட்சத்திர வீரர்களுக்கு முதல் இரண்டு ஆட்டங்களில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களுக்கான இந்திய அணிக்கு கேப்டனாக கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் அணியில் சேர்க்கப்படாமல் இருந்த ஸ்ரேயஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதல் 2 ஆட்டங்களுக்கான இந்திய அணி விவரம் வருமாறு: கே.எல் ராகுல் (கேப்டன்), ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், ஆர்.அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது ஷமி, முகம்மது சிராஜ், பிரஷித் கிருஷ்ணா

3-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் முதல் 2 ஆட்டங்களில் அணியில் இடம்பெறாத ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய நட்சத்திர வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதன்படி 3-வது ஆட்டத்துக்கான இந்திய அணி விவரம் பின்வருமாறு;-

ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஆர்.அஸ்வின் 

 இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் ஆஸ்திரேலிய அணி வரும் 22,24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்