Image Courtesy : ICC / AFP 
கிரிக்கெட்

மாதாந்திர சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருதை அறிவித்தது ஐசிசி..!!

மார்ச் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனை விருதை ஐசிசி அறிவித்துள்ளது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து ஐசிசி அண்மைக்காலமாக அறிவித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்கான வீரர்களின் பெயரை ஐசிசி சமீபத்தில் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் , வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரைக் பிராத்வேட் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று இருந்தது.

அதே போல் பெண்களுக்கான பரிந்துரை பட்டியலில் சோபி எக்ளேஸ்டோன் , லாரா வால்வோர்டட் மற்றும் ரேச்சல் ஹெய்ன்ஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில் மார்ச் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக பாபர் அசாம்-மும் சிறந்த வீராங்கனையாக ஆஸ்திரேலியாவின் ரேச்சல் ஹெய்ன்ஸ்-யும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்