கிரிக்கெட்

புச்சிபாபு கிரிக்கெட்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் அணி 344 ரன் குவிப்பு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன் அணி 61 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.

தினத்தந்தி

கோவை,

புச்சிபாபு நினைவு அகில இந்திய அழைப்பு கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) நேற்று முன்தினம் தொடங்கியது. நெல்லை, கோவை, சேலம், நத்தம் ஆகிய இடங்களில் நடக்கும் இந்த போட்டியில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன்- கேரளா இடையிலான லீக் ஆட்டம் நெல்லையில் நடக்கிறது. இதில் முதலில் பேட் செய்த கேரளா 218 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லெவன் அணி 2-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 344 ரன்கள் குவித்து 126 ரன் முன்னிலை பெற்றுள்ளது. மாதவா பிரசாத் (72 ரன்), கேப்டன் ஷாருக்கான் (60 ரன்), நிதிஷ் ராஜகோபால் (90 ரன்) அரைசதம் அடித்தனர்.

கோவையில் நடக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவனுக்கு எதிரான ஆட்டத்தில் 4-251 ரன் என்ற முந்தைய நாள் ஸ்கோருடன் 2-வது நாளில் தொடர்ந்து ஆடிய இந்தியன் ரெயில்வே 327 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. சந்தீப் வாரியர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் லெவன் அணி 61 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்