பார்படோஸ்,
கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் கயானாவை வீழ்த்தி பார்படோஸ் அபார வெற்றி பெற்றது.
14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன
இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 35வது லீக் ஆட்டத்தில் பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பார்படோஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கயானா 18.1 ஓவரில் 99 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் தொடக்க வீரர் பிலிப்ஸ் அதிகபட்சமாக 24 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய பார்படோஸ் அணியின் ஜொஹன் லெனி, கசன்பர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பார்படோஸ் 14.5 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கயானா அமேசான் வாரியர்சை வீழ்த்தி பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய பிரண்டன் கிங் 44 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.