கிரிக்கெட்

துஷார் தேஷ்பாண்டேவின் பிறந்தநாளை கொண்டாடிய சென்னை அணியினர்

துஷார் தேஷ்பாண்டே இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்

தினத்தந்தி

 சென்னை,

கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கிய 17-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 6 லீக் போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில், கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகளே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 2 இடங்களுக்கு சென்னை, ஐதராபாத், டெல்லி, லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய 5 அணிகளுக்கிடையே போட்டி காணப்படுகின்றது.

சென்னை அணி 18ம் தேதி நடைபெற உள்ள முக்கியமான ஆட்டத்தில் பெங்களூரு அணியுடன் மோதவுள்ளது. இதில் வெற்றிபெற்றால் சென்னை அணி எளிதாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். இந்த போட்டிக்காக சென்னை அணி வீரர்கள் இன்று பெங்களூரு சென்றனர். அங்கு தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் . துஷார் தேஷ்பாண்டேவின் பிறந்தநாளை சென்னை அணி வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்