சென்னை,
5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. முதல் 3 சீசன்களில் களிர் கோப்பையை மும்பை 2 முறை , பெங்களூரு அணி ஒரு முறை கைப்பற்றியுள்ளது
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை, பெங்களூரு, குஜராத், உபி, டெல்லி ஆகிய மாநிலங்கள் சார்பில் அணிகள் உள்ளது. இதில் தமிழகம் சார்பில் எந்த அணியும் இல்லை.
இந்நிலையில் சென்னை அணி நிர்வாகத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை மகளிர் கிரிக்கெட்டில் முதலீடு செய்வதாக இருக்கும் என்று சென்னை அணி தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் உறஉறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி மகளிர் பிரீமியர் லீக் தொடரில் தமிழகத்தை அடையாளப்படுத்தும் வகையில் ஒரு அணி உருவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.