சென்னை,
முதல்-அமைச்சர் விஜய்யை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் சந்தித்தார். சாய் சுதர்சனுடன் அவரது அம்மாவும் விஜய்யை சந்தித்தனர்.
முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்தது தொடர்பாக சாய் சுதர்சன் கூறியதாவது,
நீண்ட காலத்திற்கு என் நினைவில் நிலைத்திருக்கப்போகும் இந்த தருணத்திற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நம் முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்தது ஒரு பெரிய பாக்கியம். என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.