கிரிக்கெட்

கஜா புயல் பாதிப்பு: சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் #SaveDelta பதாகைகளுடன் இளைஞர்கள்...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு உதவிசெய்யுமாறு சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இளைஞர்கள் கோரிக்கை பதாகையை தாங்கியிருந்தனர்.

நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொதுமக்கள், நிறுவனங்கள், திரையுலகினர் நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யுமாறு கோரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. அங்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் ஒலித்தது. அங்கிருந்த தமிழ் இளைஞர்கள் டெல்டாவை காப்பாற்றுவோம், தமிழ்நாடு விவசாயிகளை காப்பாற்றுவோம் என்ற கோரிக்கை தாங்கிய பதாகைகளை ஏந்திருந்தனர். ராஜபாளையம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...