கிரிக்கெட்

இந்தியா - பாகிஸ்தான் போட்டி விவகாரம்: ஷாகித் அப்ரிடி வருத்தம்

இந்தியாவுடனான போட்டியை மட்டும் புறக்கணிக்கப் பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை,

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் விளையாடாது என்பது வருத்தமளிப்பதாக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில்,

’டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் விளையாடாது என்பது வருந்தத்தக்கது. இருப்பினும் அரசின் முடிவின் பின்னால் நான் நிற்கிறேன். இது எந்தவித பாரபட்சமும் இல்லாமல், நியாயமான முடிவுகள் மூலம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தங்களை நிரூபிக்க வேண்டிய தருணமாக ஐசிசி-க்கு மாறியுள்ளது’ என்றார்.

வங்கதேச அணி உலகக்கோப்பைத் தொடரிலிருந்து நீக்கப்பட்டநிலையில், மாற்று அணியாக ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், வங்கதேசத்திற்குத் தங்களின் ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும் இந்தியாவுடனான போட்டியை மட்டும் புறக்கணிக்கப் பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது.

Also read:இந்தியாவுக்கு எதிராக விளையாட மறுப்பு - பாகிஸ்தானை தடை செய்ய ஐ.சி.சி ஆலோசனை?

இலங்கையில் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம். ஆனால் இந்தியாவுக்கு எதிராக விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் தெரிவித்தது. இந்நிலையில், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பாகிஸ்தானை எச்சரித்துள்ளது.

இலங்கையில் வரும் 15-ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத இருப்பது குறிப்பிடத்தக்கது.

தன்னம்பிக்கை அனைத்தையும் சாத்தியமாக்கும்; பிரதமர் மோடி

மனைவியுடன் தகராறு: 12 வயது மகனை குத்திக்கொன்ற தந்தை - அதிர்ச்சி சம்பவம்

டெல்லியில் பா.ஜனதா கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் இன்று நடக்கிறது

மனைவியை குத்திக்கொன்ற வழக்கில் அரசு ஊழியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

"இந்திய அமெரிக்க வர்த்தகம் இனி மென்மேலும் பூத்துக் குலுங்கும்"- உள்துறை மந்திரி அமித்ஷா