* ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மொகாலியில் நடந்த கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது. தோல்விக்கு பிறகு பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கூறுகையில், இந்த சீசனில் பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் நாங்கள் பவர்-பிளேயில் (முதல் 6 ஓவர்) மெச்சும்படி செயல்படவில்லை. பவர்-பிளேயில் மோசமாக ஆடியதே நிறைய ஆட்டங்களில் தோல்வியை சந்திக்க நேரிட்டது என்றார்.