கிரிக்கெட்

துலீப் கோப்பை கிரிக்கெட்: தெற்கு மண்டல அணி 'சாம்பியன்'

ஹனுமா விஹாரி தலைமையிலான தெற்கு மண்டலம் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.

தினத்தந்தி

பெங்களூரு,

துலீப் கோப்பை கிரிக்கெட்டில் தெற்கு - மேற்கு மண்டல அணிகள் இடையிலான இறுதிப்போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த 12-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தெற்கு மண்டலம் 213 ரன்னும், மேற்கு மண்டலம் 146 ரன்னும் எடுத்தன. 67 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தெற்கு மண்டல அணி 230 ரன்களுக்கு ஆட்டமிழந்து 298 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய மேற்கு மண்டலம் 4-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் கடைசி நாளான நேற்று தொடர்ந்து ஆடிய மேற்கு மண்டலம் 84.2 ஓவர்களில் 222 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பிரியங் பன்சால் 95 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் ஹனுமா விஹாரி தலைமையிலான தெற்கு மண்டலம் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.

இரு இன்னிங்சையும் சேர்த்து 8 விக்கெட்டுகளை சாய்த்த தெற்கு மண்டல வேகப்பந்து வீச்சாளர் வித்வாத் கவீரப்பா ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை பெற்றார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து