கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒரு நாள் போட்டி: இந்தியா 329/10 (48.2 ஓவர்கள்)

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி ஒரு நாள் போட்டியில் 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 329 ரன்கள் எடுத்துள்ளது.

தினத்தந்தி

புனே,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் புனேயில் நடந்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித் 6 பவுண்டரிகளை விளாசினார். அவரது ஆட்டத்தில் சிக்சர்கள் வரவில்லை. 37 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ரஷீத் பந்து வீச்சில் போல்டானார்.

ஆனால், மறுபுறம் ஷிகர் தவான் அதிரடியாக 10 பவுண்டரிகளை விளாசி தள்ளி அரை சதம் கடந்துள்ளார். 67 ரன்களில் ரஷீத் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கடந்த 2 ஆட்டங்களிலும் அரை சதம் கடந்து அதிரடி காட்டிய கோலி மற்றும் ராகுல் இந்த ஆட்டத்தில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அவர்கள் இருவரும் 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். கடந்த ஆட்டத்தில் அரை சதம் அடித்த ரிஷாப் பண்ட் இந்த ஆட்டத்திலும் சிறப்புடன் விளையாடினார்.

அவர் 5 பவுண்டரிகளுடன் 4 சிக்சர்களையும் பறக்க விட்டார். எனினும், 78 ரன்களில் கர்ரன் பந்து வீச்சில் பட்லரிடம் கேட்ச் ஆனார். ஹர்தீக் பாண்ட்யாவும் அரை சதம் எடுத்துள்ளார். அவர் 64 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் போல்டானார்.

இந்திய அணியில் 3 வீரர்கள் அரை சதம் அடித்து அதிரடி ஆட்டம் வெளிப்படுத்தி உள்ளனர். பின்பு குருணல் பாண்ட்யா (25), ஷர்துல் தாக்குர் (30), புவனேஷ்வர் (3), பிரசீத் கிருஷ்ணா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். நடராஜன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

இதனால், இந்திய அணி 48.2 ஓவர்களையும் இழந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்களை சேர்த்து உள்ளது. இங்கிலாந்து வெற்றி பெற 330 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு