கிரிக்கெட்

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.

கிறைஸ்ட்சர்ச்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டித் தொடரில் முதலாவது ஆட்டம் கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 44 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜேம்ஸ் வின்ஸ் 59 ரன்களும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), பேர்ஸ்டோ 35 ரன்களும், கேப்டன் மோர்கன் 34 ரன்களும் எடுத்தனர். இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நாளை நடக்கிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்