Image Courtesy : Twitter / @IPL 
கிரிக்கெட்

நடப்பு ஐபிஎல் தொடரில் ஒருவருக்கு முதன் முதலாக கொரோனா பாதிப்பு உறுதி - ரசிகர்கள் அதிர்ச்சி

முதல் முறையாக நடப்பு ஐபிஎல் தொடரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீரர்கள் மற்றும் அணியின் சக பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் பயோ - பபிள் முறையில் உள்ளனர்.

இந்த சீசனில் 24 போட்டிகள் வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் தற்போது முதல் முறையாக ஐபிஎல் அணியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பிசியோ பேட்ரிக் பார்ஹார்ட்-க்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது டெல்லி அணியின் மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்" என்று ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அணியில் உள்ள அனைத்து வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அனைவரும் பயோ பபிளில் இருப்பதால் மற்ற வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி அணி தங்கள் அடுத்த போட்டியில் பெங்களூரு அணியை நாளை எதிர்கொள்கிறது. இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்டுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்