கிரிக்கெட்

முதலாவது தகுதி சுற்று: மதுரை பாந்தர்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் இன்று மோதல்

முதலாவது தகுதி சுற்றில் மதுரை பாந்தர்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை,

8 அணிகள் இடையிலான 10-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றுடன் லீக் சுற்று நிறைவடைந்தது.

இன்று நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மதுரை பாந்தர்ஸ்-திருச்சி கிராண்ட் சோழாஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன. நாளை நடைபெறும் வெளியேற்றுதல் சுற்றில் திருப்பூர் தமிழன்ஸ்-கோவை கிங்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.