தர்மசாலா.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 1 டெஸ்ட். 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான ஒரே டெஸ்ட் போட்டி கடந்த 6ம் தேதி தொடங்கியது. அதில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
தற்போது இந்தியா -ஆப்கானிஸ்தான் அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. இமாச்சலபிரதேச மாநிலம் தரம்சாலாவில் இன்று மதியம் 1.30 மணிக்கு ஆட்டம் தொடங்க இருந்தநிலையில், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் மழை நின்றதால் போட்டி தொடங்க உள்ளது. போட்டி 25 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் அணி பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இப்ராஹிம் சத்ரான் 1 ரன்,
செதிகுல்லா அடல் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரஹ்மத் ஷா 3 ரன்களில் வெளியேறினார்.
இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மதுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடினார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அவர் சதமடித்து அசத்தினார். 51 பந்துகளில் அவர் 102 ரன்கள் எடுத்தார்.
இதனால் ஆப்கானிஸ்தான் அணி 24.5 ஓவர்கள் முடிவில் 194 ரன்களுக்கு ஆட்டமிழந்த்த்து. இந்திய அணியில் ஹர்ஷ் துபே , கர்னூர் ப்ரார் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.