Image Courtesy: AFP  
கிரிக்கெட்

கடுமையாக உழைத்து அரையிறுதிக்கு வந்ததில் மகிழ்ச்சி - நவீன் உல் ஹக்

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இன்று வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

தினத்தந்தி

கிங்ஸ்டவுன்,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இன்று வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 115 ரன்கள் மட்டுமே அடித்தது. இருப்பினும் மனம் தளராத அந்த அணி, முழு மூச்சுடன் போராடி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் முன்னேறி வரலாறு படைத்துள்ளது.

இந்த ஆட்டத்தில் அபாரமாக பந்துவீசிய ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக்குக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, கடந்த சில வருடங்களாக இப்படியான வெற்றிக்காக நாங்கள் மிகக் கடுமையாக உழைத்து வருகிறோம். இந்த நாளுக்காக நாங்கள் கனவு கண்டு உழைத்தோம். இது ஒரு அதிசயமான உணர்வு. மேலும் 12.1 ஓவரில் இலக்கை துரத்த வங்காளதேச அணி முயற்சிக்கும் என்று எங்களுக்கு தெரியும். இதன் காரணமாக நாங்கள் ஆட்டத்தில் இருந்தோம்.

எங்கள் திட்டம் எளிமையாக இருந்தது. நாங்கள் பவர் பிளேவில் முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினோம். இந்தப் போட்டிகள் எங்கு முடியும் என்று தெரியாது. திடீரென உங்கள் கைகளை விட்டுப் போனது போல இருக்கும். ஆனால் ஒரே ஒரு விக்கெட் உங்களை மீண்டும் ஆட்டத்திற்குள் கொண்டு வரும். இது ரன் அடிக்கக்கூடிய ஆடுகளம் இல்லை. எனவே நீங்கள் போட்டியில் தொடர்ந்து இருப்பீர்கள். கடுமையாக உழைத்து அரையிறுதிக்கு வந்ததில் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு