கிரிக்கெட்

வான்கடே மைதானத்தின் ஊழியர்களுக்கு பரிசு வழங்கிய ஹர்திக் பாண்டியா

பயிற்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அவர்கள் செய்து வந்தனர்.

மும்பை,

2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது.இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா சிறப்பாகி செயல்பட்டார்.தீவிர பயிற்சியில் ஹர்திக் பாண்ட்யா ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு உறுதுணையாக இருந்தவர்கள் வான்கடே மைதானத்தின் ஊழியர்கள். பயிற்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அவர்கள் செய்து வந்தனர்.

இந்நிலையில் உலகக்கோப்பை தொடர் முடிந்து திரும்பியுள்ள ஹர்திக் பாண்ட்யா, அந்த ஊழியர்களை நேரில் சந்தித்து தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மைதான ஊழியருக்கும் தலா ஒரு தங்க நாணயம் மற்றும் கணிசமான ஊக்கத்தொகையை பரிசாக வழங்கியுள்ளார்.