கிரிக்கெட்

பி.சி.சி.ஐ.யின் புதிய இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக ஹேமங் அமீன் நியமனம்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) புதிய இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக ஹேமங் அமீன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பி.சி.சி.ஐ.) தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2016ம் ஆண்டு ராகுல் ஜோரி பதவியேற்றார். அதற்கு முன் சசாங் மனோகர் அந்த பதவியை வகித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், ஜோரி கடந்த சில மாதங்களுக்கு முன் தனது பதவியில் இருந்து விலகினார். அவரது ராஜினாமாவை பரிசீலனையில் வைத்திருந்த பி.சி.சி.ஐ., கடந்த வாரம் ஏற்று கொண்டது.

இதனை தொடர்ந்து பி.சி.சி.ஐ.யின் புதிய இடைக்கால தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.) ஹேமங் அமீன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்டிகளுக்கான சி.ஓ.ஓ.வாக ஹேமங் இருந்து வருகிறார். அவர், பி.சி.சி.ஐ.யின் இடைக்கால

சி.இ.ஓ. பதவியையும் கூடுதலாக ஏற்று கொள்கிறார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள சூழ்நிலையில், கடந்த மார்ச்சில் இருந்து இந்திய அணியானது ஒரு நாள் போட்டி, இருபது ஓவர் உள்பட எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாடவில்லை.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து