கிரிக்கெட்

ஜம்மு காஷ்மீர் அணிக்கு ஐசிசி தலைவர் ஜெய்ஷா வாழ்த்து

ஜம்மு-காஷ்மீர் அணிக்கு ஐசிசி தலைவர் ஜெய்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மும்பை,

ரஞ்சி டிராபி 2025-2026 சீசனில் ஜம்மு-காஷ்மீர் அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கர்நாடகாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. வரலாற்று சாதனைப் படைத்துள்ள ஜம்மு-காஷ்மீர் அணிக்கு ஐசிசி தலைவர் ஜெய்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது எக்ஸ் தள பதிவில்,

ஜம்மு காஷ்மீர் அணிக்கு வாழ்த்துக்கள். வீரர்கள் பெறும் பாராட்டுக்கு முழுமையாக தகுதியானவர்கள் . இந்த மைல்கல் சாதனையை உருவாக்க உழைத்த ஜம்மு & காஷ்மீர் பயிற்சியாளர்கள், நிர்வாகம் மற்றும் நிர்வாகிகளின் பங்களிப்பையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த வெற்றி, தலைமுறையினரின் இதயங்களில் நம்பிக்கையைத் தூண்டும் , அடுத்த தலைமுறையினர் ஒரு மட்டை அல்லது பந்தை எடுக்கத் தூண்டும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.

நமது விளையாட்டு உலகம் முழுவதிலுமிருந்து இதுபோன்ற உத்வேகக் கதைகளால் நிறைந்துள்ளது, மேலும் இதுவும் அதன் பாராட்டைப் பெறும் என்று நம்புகிறேன்என்று தெரிவித்துள்ளார்.