லாகூர்,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் முகமது ஷாசாத்திடம் உள்ளூர் போட்டியின் போது ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து முகமது ஷாசாத் 4 மாதம் விளையாட தடை விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.