கிரிக்கெட்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் பயிற்சிக்கு திரும்பினார்; ரசிகர்கள் மகிழ்ச்சி

இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயத்தில் இருந்து மீண்டு பயிற்சிக்கு திரும்பியுள்ளார்.

தினத்தந்தி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியில் இடம் பெற்ற ஷிகர் தவான் காயத்தினால் விலகினார். அவருக்கு பதிலாக ரிஷப் பன்ட் அணியில் சேர்க்கப்பட்டார். இதேபோன்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவரது காயம் விரைவில் குணமடையும் என மருத்துவர்கள் கூறினர்.

இதனால் அணியில் புவனேஷ்வர் குமார் தொடருவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது. காயத்தினால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை. இந்நிலையில் காயம் குணமடைந்து அவர் வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார். வருகிற 27ந்தேதி நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக அவர் பயிற்சி மேற்கொண்டார்.

இதுபற்றிய புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவருடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆல் ரவுண்டர்களான விஜய் சங்கர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்