கிரிக்கெட்

இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி

இந்தியா - நியூசிலாந்து கிரிக்கெட் 3-வது ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி அடைந்தது.

தினத்தந்தி

இந்தியா - நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குயின்ஸ்டவுனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 49.3 ஓவர்களில் 279 ரன் எடுத்து ஆல்-அவுட் ஆனது. மேகனா (61 ரன்), ஷபாலி வர்மா (51 ரன்), தீப்தி ஷர்மா (69 ரன்) ஆகியா அரைசதம் அடித்தனர். கேப்டன் மிதாலிராஜ் (23 ரன்), ஹர்மன்பிரீத் கவுர் (19 ரன்) பெரிய அளவில் சோபிக்கவில்லை.

பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 49.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 280 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. ஒரு கட்டத்தில் 171 ரன்னுக்குள் 6 விக்கெட்டை இழந்த நிலையில் லாரன் டவுன் (64 ரன்கள், 52 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) நிலைத்து நின்று தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் விரட்டிப்பிடித்த (சேசிங்) 2-வது அதிகபட்ச இலக்கு இதுவாகும்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 4-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் வருகிற 22-ந் தேதி நடக்கிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை