கிரிக்கெட்

அந்நிய மண்ணில் முதல் முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய வீரர் குல்தீப் யாதவ் சாதனை

அந்நிய மண்ணில் முதல் முறையாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய வீரர் குல்தீப் யாதவ் சாதனை படைத்துள்ளார்.

தினத்தந்தி

சிட்னி,

இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது.

இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டியை டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 104.5வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 300 ரன்களை எடுத்து பாலோ-ஆன் ஆனது. அந்த அணி 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

இந்திய அணியின் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அவர் மொத்தம் 2 முறை 5 விக்கெட்டுகள் எடுத்து உள்ளார். இதில் அந்நிய மண்ணில் (ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில்) முதல் முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டியில் கவாஜா (27), ஹெட் (20), பெய்னி (5), லையன் (0), ஹேசில்வுட் (21) என ஆஸ்திரேலிய அணியின் 5 வீரர்களை வீழ்த்தி இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.

இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை