அபுதாபி,
துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 38வது ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான
டெல்லி கேபிடல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து 7.30 மணிக்கு துவங்க இருக்கும் ஆட்டத்தில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.