கிரிக்கெட்

ஐ.பி.எல். 2020: டெல்லிக்கு 195 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா அணி

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 194 ரன்கள் குவித்துள்ளது.

தினத்தந்தி

அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 42வது ஆட்டத்தில் இயன் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் அபுதாபியில் உள்ள ஷேக் சாயீத் மைதானத்தில் நடக்கிறது.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் நிதிஷ் ரானா களமிறங்கினர். ஷுப்மன் கில் 9 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், நிதிஷ் ரானா 53 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 81 ரன்கள் குவித்தார்.

இதற்கிடையில் ராகுல் திரிபாதி (13 ரன்கள்), தினேஷ் கார்த்திக்(3 ரன்கள்) அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய சுனில் நரேன் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் விளாசி அதிரடி காட்டினார். 32 பந்துகளில் 64 ரன்கள் குவித்த சுனில் நரேன் ரபாடா பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிர்கு 194 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 195 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி தற்போது விளையாடி வருகிறது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு