கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் 2020: சென்னைக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்தது பெங்களூரு

சென்னை அணியுடான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 169 ரன்கள் எடுத்துள்ளது.

தினத்தந்தி

அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 25வது ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இன்றைய ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.

கடந்த முறை கொல்கத்தா அணியுடனான ஆட்டத்தில் கேதர் ஜாதவின் ஆட்டம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் இன்று சென்னை அணியில் கேதர் ஜாதவ் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக தமிழக வீரர் ஜெகதீசன் இடம்பிடித்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தேவ்தத் படிக்கல் மற்றும் ஆரோன் ஃபின்ச் களமிறங்கினர்.

ஆரோன் ஃபின்ச் 3 ரன்களில் ஆட்டமிழக்கவே, அடுத்த விக்கெட்டிற்கு கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். இந்நிலையில் ஷர்துல் தாக்கூர் வீசிய 11வது ஓவரில் தேவ்தத் படிக்கல்(33 ரன்கள்) கேட்ச் ஆனார். இதற்கடுத்து களமிறங்கிய டிவில்லியர்ஸ்(0 ரன்கள்), வாஷிங்டன் சுந்தர்(10 ரன்கள்) இருவரும் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினர்.

மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் விராட் கோலி(4 பவுண்டரி, 4 சிக்ஸர்) 52 பந்துகளில் 90 ரன்கள் விளாசினார். இறுதியாக பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் குவித்தது. விராட் கோலி(90 ரன்கள்) மற்றும் சிவம் துபே(22 ரன்கள்) இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து 170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி சென்னை அணி தற்போது விளையாடி வருகிறது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு