மும்பை,
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், இன்றைய 8-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் டோனி, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து 7.30 மணிக்கு துவங்க இருக்கும் ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.