கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதாபாத் அணி முதலாவதாக பேட்டிங்

ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

தினத்தந்தி

அபுதாபி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 52-வது லீக் ஆட்டம் அபுதாபியில் உள்ள சேக் சாயீத் மைதானத்தில் இன்று நடக்கிறது. இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதுகிறது. இதில் பெங்களூரு அணி 12 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 4 தோல்வி என்று 16 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறி விட்டது.

அதே சமயம் ஐதராபாத் அணி 12 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 10 தோல்வி என்று 4 புள்ளியுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் ஐதராபாத் அணி, ஆறுதல் வெற்றிக்காக முடிந்தவரை போராடும். பலம் வாய்ந்த பெங்களூரு அணியின் டாப்-2 ஆசையை ஐதராபாத் சிதைக்குமா என்பதே இன்றைய ஆட்டத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஐதராபாத் அணி தற்போது முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு