கிரிக்கெட்

ஐபிஎல் : மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக மார்க் பவுச்சர் நியமனம்

ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

2023 ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் மார்க் பவுச்சர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த ஜெயவர்தனே அந்தப் பதவியிலிருந்து விலகினார். அவருக்கு ஒட்டுமொத்த மும்பை அணிகளின் செயல்திறன் மேற்பார்வையாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் மார்க் பவுச்சர் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் மார்க் பவுச்சர் வரும் டி20 உலக கோப்பை தொடருடன் பதவிலியிலிருந்து விலகுவது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை