கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டிகள்: 350 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்

ஐ.பி.எல். போட்டிகளில் 350 சிக்சர்கள் விளாசிய முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் படைத்துள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று விளையாடின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியில், அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் 350 சிக்சர்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.

அவர் 28 பந்தில் (4 பவுண்டரி, 2 சிக்சருடன்) 40 ரன்கள் எடுத்திருந்தபோது, ரியான் பராக் வீசிய பந்தில் பென் ஸ்டோக்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அட்டவணையில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடித்து வரும் கெய்ல் நேற்று அடித்த 2 சிக்சர்களால் 351 சிக்சர்களை எடுத்துள்ளார். இந்த வரிசையில், தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏ.பி. டி வில்லியர்ஸ் 237 சிக்சர்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.

இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 216 சிக்சர்களுடன் 3வது இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி முறையே 214 மற்றும் 201 சிக்சர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது