லண்டன்,
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது. இதியடுத்து, 202 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி, இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணி 11.4 ஓவர்களில் வெறும் 76 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி படுதோல்வியடைந்தது.
இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. ஆண்கள் டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி 100 ரன்களுக்கும் அதிகமான வித்தியாசத்தில் தோல்வியடைவது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில்,ஐபிஎல் போட்டியில் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என ஆர்ச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இங்கே நீங்கள் 'குட் லென்த்' (good length) பகுதியில் பந்தை நேராக வீச முயற்சிக்கலாம். ஆனால் அங்குள்ள ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாகவும், எல்லைக் கோடுகள் (boundaries) மிகச் சிறியதாகவும் இருப்பதால், நீங்கள் மிகவும் துல்லியமாகச் செயல்பட வேண்டியிருக்கும். இங்கு, பேட்ஸ்மேன்கள் தவறு செய்வதற்கான வாய்ப்பு அல்லது அதற்கான 'மார்ஜின்' (margin) சற்று அதிகமாக இருப்பதாக நான் உணர்கிறேன்.ஐபிஎல்-ல் சில சமயங்களில் 200 ரன்கள் கூட வெற்றி பெற போதுமானதாக இருப்பதில்லை. என தெரிவித்தார்.