கொழும்பு,
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் முதல் நாள் ஆட்டத்தின் போது 45 ரன்களில், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோவின் பந்தில் போல்டானார். அவர் ஆட்டமிழந்ததும் அவரை நோக்கி இலங்கை வீரர்கள் ஏதோ சொல் ஆவேசமடைந்த ஜெய்ஸ்வால், அசிதா பெர்னாண்டோவிடம் நெருக்கமாக வந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஜெய்ஸ் லின் ஹெல்மெட் அவரது நெற்றியில் லேசாக இடித்தது. சம்பவம் குறித்து விசாரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வருக்கும் போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமும். ஒரு தகுதி இழப்பு புள்ளியும் நேற்று விதித்தது.
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து ஜெய்ஸ்வால் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், 'அவர் என்ன சொன்னார் என்பது உங்களுக்கு தெரியாவிட்டால் தயவு செய்து நீங்களாக எந்த முடிவும் எடுத்து பேசாதீர்கள். யாராவது தங்களது வரம்பை மீறினால் இதியா தக்க பதிலடி கொடுக்கும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.