கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய பயிற்சியாளரை கபில்தேவ் கமிட்டி தேர்வு செய்கிறது

இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய பயிற்சியாளரை, கபில்தேவ் தலைமையிலான கமிட்டி தேர்வு செய்ய உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் உதவி பயிற்சியாளர் பதவிக்கு தகுதியான விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டது. விண்ணப்பிக்க வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். ரவிசாஸ்திரி மீண்டும் பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுவாரா? என்பதற்கு நேர்காணலுக்கு பிறகே விடைகிடைக்கும்.

வழக்கமாக சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி தான் பயிற்சியாளரை தேர்ந்தெடுத்து கிரிக்கெட் வாரியத்திற்கு பரிந்துரை செய்யும். ஆனால் தெண்டுல்கர், லட்சுமண் உள்ளிட்டோர் மீது இரட்டை ஆதாய பிரச்சினை கிளம்பியதால், இந்த முறை அவர்கள் பயிற்சியாளர் தேர்வு பணியை செய்யமாட்டார்கள் என்று தெரிகிறது. எனவே பெண்கள் அணிக்கான பயிற்சியாளரை தேர்வு செய்த முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையில் இடைக்கால கமிட்டியே ஆண்கள் அணிக்கான பயிற்சியாளரையும் தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கமிட்டியில் அன்ஷூமன் கெய்க்வாட், ஷாந்தா ரங்கசாமி ஆகியோரும் இடம் பெற்று இருந்தனர். என்றாலும் இந்த பணியை எந்த கமிட்டி மேற்கொள்ளும் என்பது சுப்ரீம் கோர்ட்டின் விசாரணைக்கு பிறகே தெரிய வரும்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு