கிரிக்கெட்

முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலிக்கு நோட்டீஸ் அனுப்ப கொல்கத்தா மாநகராட்சி முடிவு

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலிக்கு கொல்கத்தா மாநகராட்சி நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது.

தினத்தந்தி

கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க தலைவருமான கங்குலிக்கு கொல்கத்தா மாநகராட்சி நோட்டிஸ் அனுப்ப

முடிவு செய்துள்ளது. கங்குலியின் மூத்த சகோதரரும் முன்னாள் ராஞ்சி வீரருமான ஸ்னேஹசிஸ் கங்குலி அண்மையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து, அங்குள்ள நகர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், பேலாவில் உள்ள கங்குலியின் வீட்டில் சுகாதரத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, கங்குலியின் வீட்டில் இருந்த கழிவு நீர் தேங்கும் இடங்களில் டெங்கு கொசுக்களின் லார்வாக்கள் இருப்பதாகவும் அதை அகற்ற வேண்டும் என்று தெரிவிவித்து விட்டு சென்றனர்.

இதைத்தொடர்ந்து மீண்டும் நேற்று அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றபோது, கங்குலியின் வீட்டில் டெங்கு கொசுக்களின் லார்வாக்கள் அவரது வீட்டு வளாக்த்தில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து விதிகளின் படி கங்குலிக்கு நோட்டீஸ் அனுப்ப மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகமாக உள்ளது. கடந்த ஜனவரியில் இருந்து அரசு அறிவிப்பின் படி 35 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்