கிரிக்கெட்

கடைசி ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து பெண்கள் அணிக்கு ஆறுதல் வெற்றி தொடரை கைப்பற்றியது இந்தியா

இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.

தினத்தந்தி

மும்பை,

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. ஸ்மிரிதி மந்தனா (66 ரன், 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), பூனம் ரவுத் (56 ரன்) அரைசதம் அடித்தனர். கேப்டன் மிதாலிராஜ் 7 ரன்னில் கேட்ச் ஆனார். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கேத்ரின் புருன்ட் 10 ஓவர்களில் 2 மெய்டனுடன் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.

அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டேனிலி வியாட் 56 ரன்னும், கேப்டன் ஹீதர் நைட் 47 ரன்னும் எடுத்தனர். கேத்ரின் புருன்ட் ஆட்டநாயகி விருதையும், மந்தனா தொடர்நாயகி விருதையும் பெற்றனர். முதல் 2 ஆட்டங்களில் வென்று இருந்த இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஒரு நாள் போட்டித் தொடரை கைப்பற்றியது. அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டித் தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஆட்டம் வருகிற 4-ந் தேதி கவுகாத்தியில் நடக்கிறது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு