கிரிக்கெட்

வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஜிம்பாப்வே அணிக்கு 443 ரன்கள் இலக்கு

வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், ஜிம்பாப்வே அணிக்கு 443 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

டாக்கா,

ஜிம்பாப்வே - வங்காளதேச அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் வங்காளதேசம் 522 ரன்களும், ஜிம்பாப்வே 304 ரன்களும் எடுத்தன. இந்த நிலையில் 218 ரன்கள் முன்னிலையுடன் 4-வது நாளான நேற்று 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 6 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தனது 2-வது சதத்தை எட்டிய கேப்டன் மக்முதுல்லா 101 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 443 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு