மிட்செல் மார்ஷ் (image courtesy: ICC via ANI)  
கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டியில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகல்

தாயகம் திரும்பி காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொள்ளும்படி மிட்செல் மார்ஷுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் 32 வயதான மிட்செல் மார்ஷ் முதல் 4 ஆட்டங்களில் ஆடி 61 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியின் போது அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. சீக்கிரமாக குணமடையாததால், தாயகம் திரும்பி காயத்தில் இருந்து மீள்வதற்கான பயிற்சி முறைகளை மேற்கொள்ளும்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியது.

இதையடுத்து அவர் சொந்த நாட்டுக்கு சென்று விட்டார். எஞ்சிய ஐ.பி.எல். போட்டியில் ஆடுவதற்காக அவர் இந்தியாவுக்கு திரும்புவார் என்று நினைக்கவில்லை என டெல்லி பயிற்சியாளர் ரிக்கிபாண்டிங் நேற்று தெரிவித்தார். எனவே டெல்லி அணியில் அவருக்கு பதிலாக மாற்று வீரர் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்