கோப்புப்படம் AFP 
கிரிக்கெட்

பெண்கள் பிரிமீயர் லீக்: குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக மிதாலி ராஜ் நியமனம்

பெண்கள் பிரிமீயர் லீக் போட்டியில் பங்கேற்கும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக மிதாலி ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

மும்பை,

ஆண்களுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டு வருகிறது. இதே போல் பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டி நடத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனை ஏற்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு 'பெண்கள் பிரிமீயர் லீக்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்கும் 5 அணிகளில் ஒன்றான ஆமதாபாத்தை தலைமையிடமாக கொண்ட குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை ரூ.1,289 கோடிக்கு அதானி குழுமம் வாங்கி உள்ளது. தற்போது இந்த அணியின் ஆலோசகராக இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலிராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து