கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி அரைசதம் விளாசி விமர்சகர்களின் வாயை அடைப்பார்- ரவி சாஸ்திரி

ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி அரைசதம் விளாசி விமர்சகர்களின் வாயடைப்பார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் குறித்து தனியார் டி.வி. சேனல் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்த பேட்டியில் 'இயல்பான மனநிலையில் உள்ள இந்திய வீரர் விராட் கோலி வலுவாக மீண்டு வருவார். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்திலேயே அரைசதம் அடித்து விட்டால் போதும். எஞ்சிய ஆட்டங்களுக்கு விமர்சகர்களின் வாயை அடைந்து விடுவார். கடந்த காலத்தில் நடந்தது முடிந்த போன விஷயம். பெரிய ஆட்டக்காரரான அவர் உரிய நேரத்தில் பார்முக்கு வந்து விடுவார். பணிச்சுமையில் இருந்து விடுபட வீரர்களுக்கு ஓய்வு தேவை. மோசமாக விளையாடும் தருணத்தை எதிர்கொள்ளாத வீரர்கள் இந்த உலகில் யாரும் கிடையாது' என்றார். ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு