சென்னை,
சையது முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் சூரத்தில் வருகிற 21-ந் தேதி முதல் மார்ச் 2-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான தமிழக அணியின் கேப்டனாக ஆர்.அஸ்வின் நியமிக்கப்பட்டு இருக்கிறார். தமிழக அணி வருமாறு:-
அஸ்வின் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர் (துணை கேப்டன்), ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ஹரி நிஷாந்த், ஷாருக்கான், பாபா இந்திரஜித், விவேக், டி.நடராஜன், முகமது, கவுசிக், சாய் கிஷோர், எம்.அஸ்வின், சதுர்வேத், விஜய் சங்கர், அதிசயராஜ் டேவிட்சன், அபிஷேக் தன்வார்.