கிரிக்கெட்

முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக களம் இறங்கிய தெண்டுல்கர் மகன் ஒரு விக்கெட் வீழ்த்தினார்

38 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

மும்பை,

இதில் இ பிரிவில் மும்பையில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் மும்பை-அரியானா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை அணி 19.3 ஓவர்களில் 143 ரன்னில் முடங்கியது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் உள்பட 4 வீரர்கள் டக்-அவுட் ஆனார்கள். தொடர்ந்து ஆடிய அரியானா 17.4 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் மூலம் சீனியர் 20 ஓவர் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக மும்பை அணிக்காக இறங்கிய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகனான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஜூன் தெண்டுல்கர் 3 ஓவர்களில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். முன்னதாக பேட்டிங்கின் போது அவருக்கு பந்தை எதிர்கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து 3-வது தோல்வியை தழுவிய மும்பை அணி கால்இறுதி வாய்ப்பை பறிகொடுத்துள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை