மும்பை
நேற்று மும்பையில் நடைபெற்ற 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் 14 மாணவன் தானிஷ்க் குவாட் அவுட் இல்லாமல் 1045 ரன்கள் எடுத்து சாதனை புரிந்தார். மாணவன் தானிஷ்க் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள் விளையாடி உள்ளார்.
இந்த போட்டியின் அரை இறுதி ஆட்டம் கொபர்கரேன்னில் உள்ள யஷ்வந்த்ராவ் சவான் ஆங்கிலம் நடுநிலை பள்ளி மைதானத்தில் நடைபெற்றது என பயிற்சியாளர் மணீஷ் கூறினார். லெக்சைடு எல்லைக்கோடு 60-65 யார்டு இருந்தது. ஆப் சைடு எல்லைக்கோடு 50 யார்டு இருந்தது. 149 பவுண்ட்ரிகளும் 67 சிக்சர்களும் அடித்து உள்ளார். தானிஷ்க் யஷ்வந்த்ராவ் சவான் அணிகாக விளையாடி உள்ளார். இத்தகவலை பயிற்சியாளர் மணீஷ் தெரிவித்து உள்ளார்.