Image Courtesy: AFP  
கிரிக்கெட்

சேப்பாக்கத்தில் தோனிக்காக ஒலித்த ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு சத்தத்தை வேறு எங்கும் கேட்டதில்லை - மிட்செல் ஸ்டார்க்

எம்.எஸ். தோனி ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

தினத்தந்தி

மும்பை,

இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டனாக விளங்கிய எம்.எஸ். தோனி ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அவர் இந்த வருடத்துடன் ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனால் தோனி களம் இறங்கும் போதெல்லாம் ரசிகர்கள் தோனி... தோனி... என ஆர்ப்பரிக்கிறார்கள்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும்போது மைதானத்தில் உள்ள சுமார் 30 ஆயிரம் ரசிகர்களும் தோனி... தோனி... என சத்தம் எழுப்பி வருகின்றனர். இது மற்ற வீரர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில், இது தொடர்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கூறியதாவது,

சேப்பாக்கத்தில் தோனிக்காக ஒலித்த ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு சத்தத்தை வேறு எங்கும் கேட்டதில்லை. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எம்.எஸ். தோனி பேட்டிங் செய்ய வந்தபோது ரசிகர்கள் தோனி தோனி என ஆர்ப்பரித்த சத்தத்தை, ஒரு லட்சம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை பார்க்கும் மெல்போர்ன் மைதானத்தில் கூட கேட்க முடியாது. இது மிகவும் வேடிக்கையானது. இவ்வாறு அவர் கூறினார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு