கிரிக்கெட்

ஒருநாள் தொடர்: முன்கூட்டியே இங்கிலாந்து சென்ற ரோகித் சர்மா

ஒருநாள் தொடருக்காக ரோகித் சர்மா முன்கூட்டியே இங்கிலாந்து சென்றுள்ளார்.

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. தற்போது டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஒருநாள் தொடருக்காக இந்திய வீரர் ரோகித் சர்மா முன்கூட்டியே இங்கிலாந்து சென்றுள்ளார். அவர் ஒருநாள் தொடருக்காக சிறப்பாக தயராக தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட உள்ளார்.