கிரிக்கெட்

2-வது ஆட்டத்தில் வெற்றி; வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது 20 ஓவர் ஆட்டத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது.

தினத்தந்தி

கராச்சி,

பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்றிரவு நடந்தது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 172 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 38 ரன்கள் எடுத்தார். கேப்டன் பாபர் அசாம் 7 ரன்னில் ரன்-அவுட் ஆனார். கடைசி கட்டத்தில் ஷதப் கான் 12 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன் 28 ரன்கள் விளாசி ஸ்கோரை கணிசமாக உயர்த்தினார்.

அடுத்து களம் புகுந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 163 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரான்டன் கிங் அரைசதம் அடித்தும் (67 ரன், 43 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) பலன் இல்லை.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. கடைசி 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்