கிரிக்கெட்

புரோ கபடி: பெங்கால் அணியிடம் மும்பை தோல்வி

புரோ கபடி போட்டியில், பெங்கால் அணியிடம் மும்பை அணி தோல்வியடைந்தது.

கொல்கத்தா,

12 அணிகள் இடையிலான 7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற 85-வது ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ்-மும்பை அணிகள் மோதின. தொடக்கத்தில் பெங்கால் அணி, மும்பையை ஆல்-அவுட் செய்தது. முதல் பாதியில் பெங்கால் அணி 16-13 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கடைசி வரை மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. ஆட்டத்தின் முடிவில் பெங்கால் அணி 29-26 என்ற புள்ளி கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது. 15-வது ஆட்டத்தில் ஆடிய பெங்கால் அணி பெற்ற 8-வது வெற்றியாகும். 15-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி சந்தித்த 7-வது தோல்வி இதுவாகும். முன்னதாக நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் சந்தித்தன. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் 32-32 என்ற புள்ளி கணக்கில் டையில் (சமநிலை) முடிந்தது.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-பாட்னா பைரட்ஸ் (இரவு 7.30 மணி), பெங்கால் வாரியர்ஸ்-பெங்களூரு புல்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு